ADMK admin
இந்தியாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் உயிரிழந்த அ.தி.மு.க. பிரமுகர்: வெடித்தது சர்ச்சை

Share

கொரோனா 2 ஆவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட அ.தி.மு.க. பிரமுகர் திடீரென்று உயிரிழந்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி ஜகநாதபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கிளை செயலாளர் வேலாயுதம் (வயது 51) நேற்று முன்தினம் கழிக்குப்பத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 2 ஆவது டோஸ் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் அன்று இரவு 7 மணியளவில் அ.தி.மு.க கிளை செயலாளர் வேலாயுதத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மரக்காணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொவிட் 02 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் அ.தி.மு.க. பிரமுகர் நெஞ்சுவலியால் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...