ADMK admin
இந்தியாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் உயிரிழந்த அ.தி.மு.க. பிரமுகர்: வெடித்தது சர்ச்சை

Share

கொரோனா 2 ஆவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட அ.தி.மு.க. பிரமுகர் திடீரென்று உயிரிழந்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சி ஜகநாதபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கிளை செயலாளர் வேலாயுதம் (வயது 51) நேற்று முன்தினம் கழிக்குப்பத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 2 ஆவது டோஸ் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் அன்று இரவு 7 மணியளவில் அ.தி.மு.க கிளை செயலாளர் வேலாயுதத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மரக்காணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொவிட் 02 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் அ.தி.மு.க. பிரமுகர் நெஞ்சுவலியால் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...