Australia Death
இலங்கைஉலகம்செய்திகள்பிராந்தியம்

அவுஸ்திரேலியாவில் தமிழ் ஏதிலி உயிரிழப்பு: காரணம் என்ன?

Share

அவுஸ்திரேலியா- மெல்போனில் தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தமிழ் ஏதிலிகள் கழகமானது தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய மெல்போன் ஹாம்ப்டன் பார்க்கைச் (Hampton Park) சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற தமிழ் ஏதிலி கடந்த 14 ஆம் திகதியன்று உறக்கத்திற்குச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக ஏனைய விடயங்கள் உறுதியாகத் தெரியவில்லை என்று தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த தமிழ் அகதி உயிரிழந்துள்ள நிலையில், இறுதி நிகழ்வுகளை நடாத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளது எனவும் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில மாதங்களில் தஞ்சம்கோரி அவுஸ்திரேலியா சென்றவர்கள் பல்வேறுபட்ட காரணங்கள் உயிரிழப்பானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு அவுஸ்திரேலிய அரசின் கடும்போக்கு மற்றும் இறுக்கமான கொள்கைகளே பிரதான காரணம் என்றும் தமிழ் ஏதிலிகள் கழகம் சாடியுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...