2 இலட்சத்திற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தேயிலை: அப்படி என்ன ஸ்பெஷல்?

Manohari Gold Tea

இந்தியாவில் அதிக விலை கொடுத்து ஒரு கிலோ தேயிலை ஏலம் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ளது.

அசாம் மாநிலத்தில் பிரபலமான மனோகரி தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

இதற்கிடையில், மனோகரி தேயிலை தோட்டத்தில் பயிரிடப்பட்ட ‘மனோகரி கோல்டு’ ரக தேயிலை நேற்று கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது.

அப்போது, ‘மனோகரி கோல்டு’ ரக தேயிலையை கிலோ ஒன்றுக்கு 99,999 ரூபாய்க்கு சவுரப் தேயிலை வியாபாரம் என்ற நிறுவனம் எடுத்துள்ளது.

இதேவேளை ஒரு கிலோ தேயிலையானது, இலங்கை மதிப்பின் படி 2 இலட்சத்து 64 ஆயிரத்திற்கு ஏலம் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#IndiaNews

Exit mobile version