tamilnig 20 scaled
இந்தியாசெய்திகள்

மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பல்

Share

மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பல்

மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பலை இந்திய கடற்படை நோட்டமிட ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சீனாவின் சியாங் யாங் ஹாங் 03 கப்பலானது இந்திய பெருங்கடலில் தற்போது நுழைந்துள்ளதாகவும் இதன் காரணமாக இந்திய கடற்படையானது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்தது.

இதற்கமைய மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின், சீனாவுக்கான விஜயத்தின்போது மாலைத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலைத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது.

இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது.

எனினும் தங்கள் கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய இலங்கை அரசு அண்மையில் தடை விதித்த நிலையில், சீன உளவு கப்பல் மாலைத்தீவை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...