tamilnig 20 scaled
இந்தியாசெய்திகள்

மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பல்

Share

மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பல்

மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பலை இந்திய கடற்படை நோட்டமிட ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சீனாவின் சியாங் யாங் ஹாங் 03 கப்பலானது இந்திய பெருங்கடலில் தற்போது நுழைந்துள்ளதாகவும் இதன் காரணமாக இந்திய கடற்படையானது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்தது.

இதற்கமைய மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின், சீனாவுக்கான விஜயத்தின்போது மாலைத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலைத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது.

இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது.

எனினும் தங்கள் கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய இலங்கை அரசு அண்மையில் தடை விதித்த நிலையில், சீன உளவு கப்பல் மாலைத்தீவை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...