unnamed 1
செய்திகள்இலங்கை

மாணவர்களிடையே அதிகரிக்கும் கொரோனா- பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் நிலை!

Share

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதாக  லேடி
ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்
பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பாடசாலைகளை மீண்டும் மூடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் தொகை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம் என்றும் குழந்தைகள் மத்தியில் கொரேனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பாடசாலைகள் மீண்டும் மூட வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகரித்தால்,பயணத்தடைகள் மீள அமுலுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் வீட்டிலும் வெளியிலும் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன் , குழந்தைகளின் நலன்களிலும் அக்கறை செலுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 9
செய்திகள்உலகம்

ஈரான் புதிய தலைமை: அமெரிக்க ஒப்புதல் இன்றி நீடிக்க முடியாது என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வாரிசாக அவரது புதல்வர் மொஜ்தபா கமேனி...

02 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் கடும் சரிவு: மசகு எண்ணெய் விலை உயர்வுடன் ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும்...

01 8
செய்திகள்உலகம்

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி பதவியேற்பு: அதிகார மையத்தில் முக்கிய மாற்றம்!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி...

20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...