unnamed 1
செய்திகள்இலங்கை

மாணவர்களிடையே அதிகரிக்கும் கொரோனா- பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் நிலை!

Share

பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதாக  லேடி
ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால்
பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பாடசாலைகளை மீண்டும் மூடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் தொகை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம் என்றும் குழந்தைகள் மத்தியில் கொரேனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பாடசாலைகள் மீண்டும் மூட வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகரித்தால்,பயணத்தடைகள் மீள அமுலுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் வீட்டிலும் வெளியிலும் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன் , குழந்தைகளின் நலன்களிலும் அக்கறை செலுத்துமாறு கேட்டுகொண்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...