ht4451702524
செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகம்!!

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு காலப்பகுதியை விட இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்பவை தொடர்பான முறைப்பாடுகள் அண்மைய நாள்களாக அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம், இராமநாதபுரம், அக்கராயன், ஜெயபுரம், நாச்சிக்குடா, பூநகரி, பளை மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 7 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த துஸ்பிரயோக சம்பவங்களைத் தவிர்த்து, சிறுவர்களைத் துன்புறுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு காயம் விளைவித்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகளும் அதிக அளவில் பதிவாகியுள்ளன. – என்றுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...