grade 5
செய்திகள்இலங்கை

பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Share

எதிர்வரும் சனிக்கிழமை (22-01-2022) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது, பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்

மாணவ,மாணவியர் எவ்வித அச்சமும் இன்றி பரீட்சைக்கு தோற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 30 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் செல்லப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

காலை 9.30 மணிக்கு பகுதி ஒன்று வினாத்தாள் ஆரம்பமாகும் எனவும் , பகுதி ஒன்று வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கு ஒரு மணித்தியாலம் வழங்கப்படும் எனவும் பகுதி இரண்டு வினாத்தாளுக்கு ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் பகுதி இரண்டு முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 255062 மாணவ,மாணவியரும்,
தமிழ்மொழி மூலம் 85446 மாணவ மாணவியரும், பரீட்சைக்காக தோற்ற உள்ளதுடன், 2943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது பரீட்சைக்காக 496 பரீட்சை இணைப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதுடன்,

கோவிட் பெருந்தொற்று உறுதியான மாணவ, மாணவியர் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக 108 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்குள் பெற்றோர் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளார்

பரீட்சைக்கு விடையளிப்பதற்கான தேவையான காகிதங்கள் மற்றும் அழிப்பான் போன்றவற்றை மாணவர்கள் எடுத்துச்செல்ல வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

#srilankanews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...