stikecvcv
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பளம் அதிகரிக்காவிடின் போராட்டத்தில் இறங்குவோம் – அரச ஊழியர்கள் போர்க்கொடி

Share

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாததால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரச உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அல்லது மேலதிக கொடுப்பனவு வழங்கல் வேண்டும்.

இரண்டு வார காலத்துக்குள் தீர்வு இல்லாது விடின் முன்னறிவித்தல் இன்றி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு வரவு– செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கப்பட்டுள்ளார்.

இதனால் 1.5 மில்லியன் அரச ஊழியர்களும் அவர்களை சார்ந்துள்ள 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகவேண்டியுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 4 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தின் செலவாக 58 ஆயிரம் காணப்படுகிறது.

தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் வாரத்துள் கவனம் செலுத்தாவிடின் எந்தவித முன்னறிவித்தலுமின்றி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நேருமென அவர்கள் அறிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...