99
செய்திகள்அரசியல்இலங்கை

ஞானசாரர் பதவியில் நீடித்தால் உடன் பதவி விலகுவேன்!– அலி சப்ரி காட்டம்

Share

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி செயலணிக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழு தொடர்ந்து இயங்கினால் உடன் பதவி விலகுவேன்.

இவ்வாறு நீதியமைச்சர் அலி சப்ரி தனது எதிர்ப்பை அரசிடம் முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி செயலணிக் குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது அனைத்து இனங்களுக்கும் நியாயமான வகையில் செயற்பட தடையாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு.

முஸ்லிம் சமூகத்தின் சமய தலைவர்களான மௌலவிகள், நீதி அமைச்சரிடம் தமது கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதை அடுத்து, அமைச்சர் தனது எதிர்ப்பை அரசிடம் முன்வைத்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையிலான செயலணிக்குழு தொடர்ந்தும் இயங்கினால், தன்னால், நீதியமைச்சராக சேவையாற்ற முடியாது என நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் பல கட்சித் தலைவர்கள், ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில் தமது விருப்பமின்மையை தெரியப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...