gotabaya rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

அரச தலைவர் என்ற தகுதி எனக்கு இல்லை: பகிரங்கமாகக் கூறினாரா கோட்டா?

Share

அரச தலைவர் பதவியினை வகிப்பதற்குரிய தகைமை தன்னிடம் இல்லையென்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்.

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மஹிந்த ராஜபக்ஷவின் சகோதாரராக இருப்பதற்கே தகுதியுள்ளதெனக் கூறியுள்ளார். “குடும்ப ஆட்சி எங்கும் உள்ளது. ஆனால், மக்கள் தான் அரசியலுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதில்லை.

இதனைப் படித்த இளைஞர்களால் தான் மாற்றியமைக்க முடியும். இதற்காக கட்சி பேதங்களைத் துறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்குச் சேவை செய்ய முடியாது போகின்ற அரசியல்வாதிகள், பதவியினைத் துறக்கும் நிலையானது இலங்கையில் உருவாக வேண்டும்.

இல்லை என்றால் நாடு இன்னும் பாதாளத்தை நோக்கியே செல்லும்” என எச்சரித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...