1578038553 sajith premadasa opposition leader 5
செய்திகள்அரசியல்இலங்கை

கலப்பின எரிவாயு சிலிண்டர்களே வெடிப்புகளுக்கு காரணம் – சஜித்

Share

எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு இன்று பாராளுமன்ற்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணையை முன்னைடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இவ் வெடிப்புச் சம்பவங்கள் நாளாந்தம் எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வெடிப்பு சம்பவங்கள் அசாதாரணமானவை அல்ல. கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 18 லீற்றர் கலப்பின எரிவாயு சிலிண்டரை அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தியப் பின்னரே குறித்த சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளன.

இது அரசின் பாரிய இலாபமீட்டும் தந்திரம். இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப எரிவாயு சிலிண்டர்களில் பியூட்டேன் மற்றும் புரொப்பேன் வீதங்கள் பூர்த்தி செய்யப்படாமல் வாயுக் கலவை மாற்றப்பட்டு எடை குறைக்கப்பட்டமையே இவ்விபத்துச் சம்பவங்களுக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...