1578038553 sajith premadasa opposition leader 5
செய்திகள்அரசியல்இலங்கை

கலப்பின எரிவாயு சிலிண்டர்களே வெடிப்புகளுக்கு காரணம் – சஜித்

Share

எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு இன்று பாராளுமன்ற்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணையை முன்னைடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இவ் வெடிப்புச் சம்பவங்கள் நாளாந்தம் எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வெடிப்பு சம்பவங்கள் அசாதாரணமானவை அல்ல. கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 18 லீற்றர் கலப்பின எரிவாயு சிலிண்டரை அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தியப் பின்னரே குறித்த சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளன.

இது அரசின் பாரிய இலாபமீட்டும் தந்திரம். இலங்கையின் காலநிலைக்கு ஏற்ப எரிவாயு சிலிண்டர்களில் பியூட்டேன் மற்றும் புரொப்பேன் வீதங்கள் பூர்த்தி செய்யப்படாமல் வாயுக் கலவை மாற்றப்பட்டு எடை குறைக்கப்பட்டமையே இவ்விபத்துச் சம்பவங்களுக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...