Vasudeva Nanayakkara
செய்திகள்அரசியல்இலங்கை

ஆங்கிலத்தில் உயர்கல்வி கற்கை நெறிகள்! – சிங்களமொழிக்கு அச்சுறுத்தல் என்கிறார் வாசுதேவ

Share

பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சிங்களமொழிக்கு அச்சுறுத்தலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கலாநிதி ஈ.எம். ரத்னபால எழுதிய ‘சிங்கள பஸ் விமசும’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தற்போது பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விசேட பட்டங்கள் ஆங்கிலத்தில் மாத்திரம் காணப்படுகின்றது.

இது இலங்கையின் பாரம்பரியத்தையும், தேசிய மொழிக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அரங்கில் ஆங்கிலத்தின் அவசியத்தை அங்கீகரிப்பது இன்றியமையாதது.

எனினும், இந்த அனைத்து விடயங்களிலும் எமது மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் வாழும் மொழியாக எமது மொழி பேணப்பட வேண்டும். இல்லாவிடின் ஆபிரிக்காவிலுள்ள சில முக்கிய மொழிகளுக்கு ஏற்பட்ட கதியை சிங்கள மொழியும் சந்திக்க நேரிடும்.

உலகின் பல நாடுகள் தமது நாட்டின் மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்துவது போன்று இலங்கையிலும் உயர்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...