Vasudeva Nanayakkara
செய்திகள்அரசியல்இலங்கை

ஆங்கிலத்தில் உயர்கல்வி கற்கை நெறிகள்! – சிங்களமொழிக்கு அச்சுறுத்தல் என்கிறார் வாசுதேவ

Share

பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சிங்களமொழிக்கு அச்சுறுத்தலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கலாநிதி ஈ.எம். ரத்னபால எழுதிய ‘சிங்கள பஸ் விமசும’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தற்போது பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கிலத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விசேட பட்டங்கள் ஆங்கிலத்தில் மாத்திரம் காணப்படுகின்றது.

இது இலங்கையின் பாரம்பரியத்தையும், தேசிய மொழிக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அரங்கில் ஆங்கிலத்தின் அவசியத்தை அங்கீகரிப்பது இன்றியமையாதது.

எனினும், இந்த அனைத்து விடயங்களிலும் எமது மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் வாழும் மொழியாக எமது மொழி பேணப்பட வேண்டும். இல்லாவிடின் ஆபிரிக்காவிலுள்ள சில முக்கிய மொழிகளுக்கு ஏற்பட்ட கதியை சிங்கள மொழியும் சந்திக்க நேரிடும்.

உலகின் பல நாடுகள் தமது நாட்டின் மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்துவது போன்று இலங்கையிலும் உயர்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...