keralarains 570 850
செய்திகள்இந்தியா

கேரளாவைத் தாக்கும் கனமழை-உத்தரகாண்டிலும் உயரும் உயிரிழப்புக்கள்!

Share

இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும்மழை பெய்துவருவதால் அங்கு பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடும்மழை பெய்துவரும் நிலையில், அங்கு 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களுக்கு, செப்ரெம்பர் 21ஆம் திகதி வரையும் இந்த விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை கேரள மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நீடிக்கும் எனவும், இதனால் அப்பகுதியில் பெருமளவு பாதிப்புக்களுக்கான வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இலட்சத்தீவு கடற்கரை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாலேயே குறித்த மாநிலங்களில் அதிக மழை பெய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும்மழை பெய்துவருவதால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 48 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...