செய்திகள்இந்தியா

கேரளாவைத் தாக்கும் கனமழை-உத்தரகாண்டிலும் உயரும் உயிரிழப்புக்கள்!

keralarains 570 850
keralarains
Share

இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும்மழை பெய்துவருவதால் அங்கு பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடும்மழை பெய்துவரும் நிலையில், அங்கு 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களுக்கு, செப்ரெம்பர் 21ஆம் திகதி வரையும் இந்த விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை கேரள மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நீடிக்கும் எனவும், இதனால் அப்பகுதியில் பெருமளவு பாதிப்புக்களுக்கான வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இலட்சத்தீவு கடற்கரை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாலேயே குறித்த மாநிலங்களில் அதிக மழை பெய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும்மழை பெய்துவருவதால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 48 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...