Education 2
செய்திகள்இலங்கை

தரம் 6 – 9 கற்றல் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பம்

Share

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகள் தற்போது பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும், வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்ட கற்றல் செயற்பாடுகளை இவ் வருட முடிவுக்குள் முழுமையாக நிறைவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் ஆண்டுக்கான தவணை இறுதி பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாத இறுதி வரை பிற்போடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிர்வாகத்தால், கல்வி அமைச்சுக்கு இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் கலந்துரையாடி தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனத் தொழிலதிபர் கைது: 3.9 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 3,915,000 ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாகக்...

world 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குழந்தைகளின் பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்: அம்பாறையில் ஒருவர் கைது!

கூரியர் சேவைகள் ஊடாகப் பொம்மைகளுக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தப்படும் புதிய தந்திரம் குறித்து இலங்கை காவல்துறை...

world 66
செய்திகள்அரசியல்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் சொத்து விபரங்கள் சமர்ப்பிப்பு: 10 வருடங்களின் பின் நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள், செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விபரங்களை...

world 65
செய்திகள்உலகம்

பூமிக்குத் திரும்பியது ஆர்ட்டெமிஸ் II: விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்த நாசா!

நிலவை நோக்கிய மனிதனின் வரலாற்றுப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, நாசாவின் ஆர்ட்டெமிஸ் II (Artemis II)...