20220313 105015 1 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்திய அரசால் வடக்கு மீனவர்களுக்கு உதவிப் பொருட்கள்!

Share

இந்திய அரசால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு இன்று மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாகக் கையளித்தார்.

600 கடற்றொழிலாளர்களுக்கு இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இந்நிலையில், குறிப்பிட்ட சிலருக்கு இதனைத் சம்பிரதாயபூர்வமாக இந்தியத் தூதுவர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ், இந்திய தூதரக அரசியல் ஆலோசகர் பானு பிரகாஸ், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் சுதாகரன் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Police 2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் விவகாரம்: 500 பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர் அதிரடி அறிவிப்பு!

இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின்...

MediaFile 8
செய்திகள்உலகம்

மதுரோவை விட மோசமான நிலையைச் சந்திப்பீர்கள்: இடைக்கால ஜனாதிபதி டெல்சிக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் மிகக்கடுமையான விளைவுகளைச் சந்திக்க...

images 2 3
செய்திகள்உலகம்

கைவிலங்குடன் நீதிமன்றத்தில் மதுரோ: அமெரிக்காவைப் பழிதீர்ப்போம் என மகன் ஆக்ரோஷ எச்சரிக்கை!

அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி...

25 693a84d09bd08 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளை மாவட்டத்தில் கனமழை: நிலச்சரிவு அபாயம் குறித்து மாவட்டச் செயலாளர் அவசர எச்சரிக்கை!

ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள...