நாட்டில் எரிபொருள் தொடர்பில் வெளிவரும் கருத்துக்கள் பொய்யானவை. எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. – இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் எரிபொருள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு வதந்திகள் பரப்புவோர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு தேவையான எரிபொருளை நான் தொடர்ந்து வழங்குவோம். தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – என்றார்.
#SriLankaNews
Leave a comment