“சிரேஷ்ட அரசியல் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே அவரை ஆலோசகராக நியமித்துக்கொள்ளுங்கள்”
இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்
சீன உரக்கப்பல் மற்றும், விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சஜித் பிரேமதாச கேள்விகளை எழுப்பினார்.
இந்த கேள்வி நேரத்தின்போதே விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, சஜித் பிரேமதாசவுக்கு மேற்படி ஆலோசனை வழங்கினார்.
மேலும், ” ரணிலை சந்தித்து, அவருக்கு வெற்றியை வழங்கி மன்னிப்பு கோருங்கள். அவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பின்னர் சரியான கேள்விகளை கேக்கலாம்.”- என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அரசு விவசாயிகளை ஒருபோதும் கைவிட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews