இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

கைக்குண்டுகள்

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதுடன், அவற்றில் ஒன்று வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த வெடிப்பினால் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் அல்லது சேதங்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version