40e2aa05 de10 4113 9676 75b1a796ac71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் வன்முறைக்கு தயாரான கும்பல் கைது!!

Share

வன்முறைக்கு தயாரான 13 பேர் அடங்கிய கும்பல் ஒன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் தங்கியிருந்த கும்பலே இன்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளது.

கைதான நபர்களிடமிருந்து வாள்கள் 5, மோட்டார் சைக்கிள் செயின்கள் 2, 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள பழமையான வீடு ஒன்றில் தங்கியிருக்கும் குழுவொன்று வன்முறைக்கு தயாராகி வருகிறது என பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட்ட நிலையில், குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

4b35bc40 1f92 43c4 af56 4c96ea198d95 1 1628930f 7dab 4bef 86db 1a8328aa6ce3

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...