puttalam 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் முற்றாக தீக்கிரையான வீடு!

Share

நேற்று ஏற்பட்ட எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் வீடும் வீட்டுடனான வர்த்தக நிலையமும் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது. குறித்த சம்பவம் புத்தளம் குறிஞ்சிப்பிட்டி குரக்கன்சேனையில் பதிவாகியுள்ளது.

காலையில் தேநீர் தயாரிக்க அடுப்பை பற்ற வைத்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென பாரிய சத்தத்துடன் அடுப்பு வெடித்து சிதறியதுடன் வீடு முழுவதும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

வீட்டில் இருந்த 3 பிள்ளைகளும், மருமகளும் பேரப்பிள்ளைகளும் வீட்டுக் வெளியே வந்து அயலவர் உதவியை நாடியுள்ளனர். பலகை வீடு என்பதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கற்பிட்டி சகாத் ஒன்றியம் வீடொன்றை நிர்மாணித்து வழங்க முன்வந்துள்ளது. குறித்த குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புவோர் 0716080071, 0774277092 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...