Tissa Kuttiyarachchi
செய்திகள்அரசியல்இலங்கை

பஸில் எந்த முடிவு எடுத்தாலும் நாம் கட்டுப்படுவோம்! – திஸ்ஸ குட்டியாராச்சி

Share

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நாம் வழங்கியுள்ளோம் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸிலுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போதே நிதி அமைச்சருக்கு பின்வரிசை எம்.பிக்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், ‘அசிங்கமான அமெரிக்கர்’ என விமல், கம்மன்பில போன்றவர்கள் தன்னை விமர்சிப்பதால் நிதி அமைச்சர் கவலையில் இருக்கின்றார், அதனை நாம் உணர்ந்தோம்.

பஸில் ராஜபக்ச என்பவர் இந்நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்யாத நபர். போர் காலத்தில் பெரும் பங்களிப்பு செய்தவர். எனவே, விமல், கம்மன்பில போன்றவர்களின் அறிவிப்பு எமக்கும் கவலை அளிக்கின்றது.

அப்படியானவர்கள் எமது அமைச்சரவையில் இருந்தது வெட்கப்பட வேண்டிய விடயம்.” – என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...