maithripala sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றனர் சுதந்திரக்கட்சியினர்!

Share

கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும், ஆலோசனையும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் விரைவில் கண்டி சென்று, மகாநாயக்க தேரர்களை சந்திப்பார்களென கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் அங்கம் வகித்தாலும், அரசின் செயற்பாடுகளை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடுமையாக விமர்சித்துவருகின்றது. இதனால் மொட்டு கட்சிக்கும், சுதந்திரக்கட்சியினருக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது.

அரசுக்குள் இருந்துகொண்டு, சலுகைகளை அனுபவித்தபடி விமர்சிப்பதைவிட, கௌரவமாக வெளியேறுங்கள் என சுதந்திரக்கட்சியினருககு மொட்டு கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் புதியதொரு கூட்டணியை கட்டியெழுப்புவதில் சுதந்திரக்கட்சியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சுதந்திரக்கட்சிக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மகநாயக்க தேரர்களை சந்தித்து, ஆலோசனை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் விரைவில் முடிவொன்ற எடுக்கவுள்ளார். அதற்காகவே அமைச்சரவை மறுசீரமைப்பைக்கூட அவர் பிற்போட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...