Vidura Wickramanayaka 1
செய்திகள்இலங்கை

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ் பல்கலைக்கு விஜயம்

Share

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

இன்று (6), சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்க விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை தொடர்பாக்க் கேட்டறிந்து கொண்டதுடன், அங்கு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். அதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் ஆய்வுகூடத்தையும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பார்வையிட்டார்.

இச் சந்திப்பின், போது தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. நிஷாந்தி ஜெயசிங்க, இலங்கை தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க, யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் கலாநிதி கே.அருந்தவராஜா, வரலாற்றுத் துறை ஓய்வுநிலை விரிவுரையாளர்களான கலாநிதி ப.புஷ்பரட்ணம், கலாநிதி கே.சிற்றம்பலம், கலாநிதி ச.சத்தியசீலன், கலாநிதி செ.கிருஷ்ணராஜா உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் கே. சிவராம், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் தொல்லியல்துறையினர், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் நிறைவில் இலங்கை தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்கவினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்கு நூல் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....