maxresdefault 1
செய்திகள்உலகம்

2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும்!

Share

எதிர்வரும் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும் எனவும் சுமார் 80 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக‚ சோமாலியாவில் சுமார் 20 இலட்சத்திற்கு மேற்பட்டோர் உணவு மற்றும் குடிநீர் வசதியின்றித் தவிக்கின்றனர்.

பல இலட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழக்கிறது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் உணவு இன்மையால் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் சோமாலியா நாட்டு அதிகாரிகளின் அறிக்கையின் படி இந்த ஆண்டும் போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறவில்லை என்பதை அறியகூடியதாக உள்ளது.

இதனால் விவசாய நடவடிக்கைகள் படுமோசமான நிலையில் காணப்படுவதாகவும்‚ சோமாலியா கடுமையான பஞ்சத்தினை நோக்கி நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...