Russia Crypto
செய்திகள்இலங்கை

பொருளாதார தடையால் ரஸ்யாவில் உணவிற்கு தட்டுப்பாடு!!

Share

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் போர் தொடுக்க தொடங்கின.உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.

சிறிய நகரங்களை ரஷியா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன.

அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ரஷியாவின் போர் முடிவால் பல்வேறு நாடுகளும் பொருளாதார தடையை அறிவித்துள்ளன.

இதன் எதிரொலியால், ரஷ்யாவில் உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பதுக்கல்களை கட்டுப்படுத்த உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அறிவித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாச்சார அபராதங்களால் ரஷியா பாதிக்கப்பட தொடங்கியுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தனியார் நுகர்வுக்குத் தேவையானதைவிட பல டன்கள் வரை பதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் சில்லறை விற்பனையாளர்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்கள் எந்த நேரத்திலும் தனிநபர்களுக்கு விற்கப்படும் குறிப்பிட்ட பொருட்களின் அளவைக் கட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டும்.

வர்த்தக அமைப்புகளின் முயற்சிக்கு தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சகம் ஆதரித்தன.

ரொட்டி, அரிசி, மாவு, முட்டை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அரசின் கட்டுப்பாடுகளுக்கு கீழ் உள்ளன என்றுள்ளது.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...