velukumar
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம்! –

Share

2022 ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் ஊழல், மோசடிகளும், தவறான முடிவுகளும், தெளிவற்ற கொள்கைகளுமே பிரதான காரணங்களாகும். அடுத்த மாதமளவில் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும்.

நாட்டு நிலைமை இவ்வாறிருக்க, அமைச்சர்கள் ‘அறிக்கைகளை’ வெளியிட்டு அரசியல் நடத்திவருவதுடன், உறுதியான அறிவிப்புகள் இன்றி ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர்.

இந்த நாட்டை பட்டினியை நோக்கி கொண்டு செல்லாதீர்கள் என அரசிடம் வலியுறுத்திக்கூறிக்கொள்கின்றோம். முடியாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள். நாட்டை பொறுப்பேற்று நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. அதற்கான கொள்கைத் திட்டங்கள் எம் வசம் உள்ளன.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...