ida
செய்திகள்உலகம்

தென் அமெரிக்காவில் ஐடா புயல் – 41 பேர் பலி

Share

தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள வெப்பமண்டல புயலான ஐடா அங்கு நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் அதன் வலுவை இழந்துள்ளது.

புயல் அதன் வலுவை இழந்திருந்தாலும், அதன் ஈரப்பதத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக
அது வடகிழக்கு நோக்கி நகர்ந்தபோது, ​​நியூயோர்க் நகரத்தில் 80 மிமீ மழையை பொழிந்துள்ளது.

அங்கு சுமார் ஒரு மணி நேரம் கொட்டிய மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வீசிய ஐடா புயல் காரணமாக குறைந்தது 41 பேர் பலியாகிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் குறைந்தது 23 பேர் நியூஜெர்சியில் வசிப்பவர்கள் என்று கவர்னர் பில் மர்பி அறிவித்துள்ளார். மேலும் பெரும்பாலானோர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தமது வாகனங்களில் சிக்கிக்கொண்டனர்.

இதேவேளை, நியூயோர்க்கில் குறைந்தது 14 பேர் தமது அடித்தள குடியிருப்பில் சிக்கி நீரில் மூழ்கி இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கனெக்டிகட்டில் ஒருவரும், பென்சில்வேனியாவின் பிலடெல்பியா அருகே மூன்று பேரும் இந்த வெள்ளப்பெருக்கால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

flood flood3 flood4 floodd

source : Storm Ida death toll climbs to 41 across four states as floods continue – BBC News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....