ida
செய்திகள்உலகம்

தென் அமெரிக்காவில் ஐடா புயல் – 41 பேர் பலி

Share

தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள வெப்பமண்டல புயலான ஐடா அங்கு நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் அதன் வலுவை இழந்துள்ளது.

புயல் அதன் வலுவை இழந்திருந்தாலும், அதன் ஈரப்பதத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக
அது வடகிழக்கு நோக்கி நகர்ந்தபோது, ​​நியூயோர்க் நகரத்தில் 80 மிமீ மழையை பொழிந்துள்ளது.

அங்கு சுமார் ஒரு மணி நேரம் கொட்டிய மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வீசிய ஐடா புயல் காரணமாக குறைந்தது 41 பேர் பலியாகிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் குறைந்தது 23 பேர் நியூஜெர்சியில் வசிப்பவர்கள் என்று கவர்னர் பில் மர்பி அறிவித்துள்ளார். மேலும் பெரும்பாலானோர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தமது வாகனங்களில் சிக்கிக்கொண்டனர்.

இதேவேளை, நியூயோர்க்கில் குறைந்தது 14 பேர் தமது அடித்தள குடியிருப்பில் சிக்கி நீரில் மூழ்கி இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கனெக்டிகட்டில் ஒருவரும், பென்சில்வேனியாவின் பிலடெல்பியா அருகே மூன்று பேரும் இந்த வெள்ளப்பெருக்கால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

flood flood3 flood4 floodd

source : Storm Ida death toll climbs to 41 across four states as floods continue – BBC News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாடசாலைகளை மூடப் போவதில்லை: வாரத்தில் 4 நாட்கள் வகுப்புகள்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கு அரசாங்கம் இதுவரை...

03 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: ஏப்ரல் 1-ஆம் திகதி இறுதி முடிவு!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி...

02 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் QR முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு: முறைகேடுகளில் ஈடுபட்ட 153 பேருக்கு எதிராக நடவடிக்கை!

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீள அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு (National Fuel Pass) முறைமையில்...

1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் அபாயம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை...