6b7e6e3e4b7f0f27205a010a6eaa99f35092a93f
செய்திகள்இலங்கை

யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!

Share

யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியைச் சேர்ந்த 98 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனைச் சேர்ந்த 81 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயது ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுப் பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், அன்டிஜென் பரிசோதனையில் அவருக்குத் தொற்றிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புக்களுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...