6b7e6e3e4b7f0f27205a010a6eaa99f35092a93f
செய்திகள்இலங்கை

யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!

Share

யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியைச் சேர்ந்த 98 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த கட்டுவனைச் சேர்ந்த 81 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயது ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த 47 வயதுப் பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், அன்டிஜென் பரிசோதனையில் அவருக்குத் தொற்றிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புக்களுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...

images 3 1
இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தவணை 6 மாதங்கள் இடைநிறுத்தம் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை...

images 4 1
இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பேரழிவு: சி.டி ஸ்கேன் உட்பட 3 பெரிய மருத்துவமனைகள் சேதம் – 100 சிறிய மருத்துவமனைகள் பாதிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100...