super delta
செய்திகள்இலங்கை

வேகமாக பரவும் புதிய திரிபு! – ஆய்வுகள் ஆரம்பம்

Share

வேகமாக பரவும் புதிய திரிபு! – ஆய்வுகள் ஆரம்பம்

புதிய கொரோனா திரிபு குறித்து மிக அவதானமாக கண்காணித்து வருகின்றோம் என இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா திரிபு வைரஸானது,
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் பெரும் திரிபாக இருக்கலாம். அத்துடன் இத் திரிபானது தற்போது பாவனையில் இருக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை எதிர்க்கும் திறனைக் கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு என உலக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இலங்கையில் இந்த திரிபு கண்டறியப்படவில்லை என்றாலும் இந்த திரிபுகள் உலகளவில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பில் சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் உள்ளது.

குறித்த சி .1.2 வைரஸ் திரிபானது தென்னாபிரிக்கா, சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து, கொங்கோ மற்றும் மொரிஷியஸ் குடியரசு போன்ற பிற நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது உலகளவில் மிக வேகமாக பரவிவரும் டெல்டா வகை திரிபைவிட இந்த சி .1.2 மிகவும் ஆபத்தானதானதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் விஞ்ஞானிகள், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...