super delta
செய்திகள்இலங்கை

வேகமாக பரவும் புதிய திரிபு! – ஆய்வுகள் ஆரம்பம்

Share

வேகமாக பரவும் புதிய திரிபு! – ஆய்வுகள் ஆரம்பம்

புதிய கொரோனா திரிபு குறித்து மிக அவதானமாக கண்காணித்து வருகின்றோம் என இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா திரிபு வைரஸானது,
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் பெரும் திரிபாக இருக்கலாம். அத்துடன் இத் திரிபானது தற்போது பாவனையில் இருக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை எதிர்க்கும் திறனைக் கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு என உலக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இலங்கையில் இந்த திரிபு கண்டறியப்படவில்லை என்றாலும் இந்த திரிபுகள் உலகளவில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பில் சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் உள்ளது.

குறித்த சி .1.2 வைரஸ் திரிபானது தென்னாபிரிக்கா, சீனா, இங்கிலாந்து, நியூசிலாந்து, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து, கொங்கோ மற்றும் மொரிஷியஸ் குடியரசு போன்ற பிற நாடுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது உலகளவில் மிக வேகமாக பரவிவரும் டெல்டா வகை திரிபைவிட இந்த சி .1.2 மிகவும் ஆபத்தானதானதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் விஞ்ஞானிகள், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...