patali champika ranawaka
செய்திகள்இலங்கை

ஒக்டோபருக்குள் நாட்டில் பஞ்சம்! – எச்சரிக்கிறார் சம்பிக்க

Share

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சந்தை விலைப்படி ஒரு கிலோ சீனியை 92 ரூபாவுக்கு வாங்கி 98 ரூபாவுக்கு மக்களுக்கு கொடுக்கலாம்.92 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய சீனியை 220 ரூபாவுக்கு விற்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அனுமதித்துள்ளார்.

உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் அவர் இராஜினாமா செய்யவேண்டும். அவ்வாறு இராஜினாமா செய்யாது விலை ஏற்றத்துக்கு ஏற்றவாறு அறிக்கைகள் வழங்கியவாறு உள்ளார். இந்நிலை தொடருமாக இருந்தால், வர்த்தக அமைச்சர் சீனி மோசடியாளர்களிடமிருந்து தரகுப்பணத்தைப் பெறுகிறார் என்றே கருதமுடியும்.

தற்போது ஒரு கிலோ சீனிக்கு 100 ரூபாவுக்கு மேல் வர்த்தகர்கள் இலாபம் சம்பாதிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபா வரை அவர்களால் சம்பாதிக்க முடியும் – என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...