இரண்டு சக்கர உழவு இயந்திரத்தை பயன்படுத்தி தோட்ட நிலத்தை உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதுகொண்டிருந்த போது உழவு இயந்திரம் புரண்டுள்ளது. இந்த நிலையில் உளவு இயந்திர சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment