Hemantha Herath 700x375 1
செய்திகள்இலங்கை

மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!

Share

மரணங்களில் வீழ்ச்சி-அபாய கட்டத்தில் இலங்கை!

கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதும் நாட்டில் நாளாந்தம் 2000 – 3000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு, நூற்றுக்கும் அதிகமான மரணங்களும் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த அறிகுறி நாடு இன்னும் அபாய நிலைமையில் காணப்படுவதை தெளிவாகக் காட்டுகிறது.

எனவே கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதற்காக திருப்தியடைய முடியாது.

எதிர்வரும் சில நாகளுக்கும் இதேபோன்று நூற்றுக்கும் அதிக மரணங்கள் பதிவாகும் நிலைமையே காணப்படும்.

ஆகவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டால் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து விலகக்கூடாது என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...