இங்கிலாந்தின்(UK) எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(14) இரவு இடம்பெற்றுள்ளது.
இரவு சுமார் 9.30 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த விமானம் நடுவானில் பறந்த போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவரசமாக தரை இறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார்.
விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசரநிலை அறிவித்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தற்போது, அந்த போர்விமானம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து எரிபொருள் நிரப்ப அனுமதி எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் – கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.