25 684eced9d65db
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர முதல்வர் போட்டியில் வெற்றி யாருக்கு! சஜித் தரப்பின் இறுதி நேரக் கருத்து

Share

கொழும்பு மாநகர முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை கணிக்க முடியாது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போது இன்று அவர் இதனை கூறியுள்ளார்.

சில உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதால், இந்த கணிப்பை முன்கூட்டியே கூற முடியாதுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் 29 உறுப்பினர்கள் நம்பகமானவர்கள், ஆனால், சுயேச்சைக் குழுக்கள் உட்பட மற்றவர்களிலேயே பிரச்சினை இருப்பதாக மரிக்கார் கூறியுள்ளார்.

சர்வஜன பலய உறுப்பினர்கள் சிலர் சில உள்ளூராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க ஒருதலைப்பட்சமாக முடிவு செய்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாளைய வாக்கெடுப்பின் முடிவுகளிலிருந்தே வெற்றி யாருக்கு என்பது தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...