25 684eced9d65db
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர முதல்வர் போட்டியில் வெற்றி யாருக்கு! சஜித் தரப்பின் இறுதி நேரக் கருத்து

Share

கொழும்பு மாநகர முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை கணிக்க முடியாது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போது இன்று அவர் இதனை கூறியுள்ளார்.

சில உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதால், இந்த கணிப்பை முன்கூட்டியே கூற முடியாதுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் 29 உறுப்பினர்கள் நம்பகமானவர்கள், ஆனால், சுயேச்சைக் குழுக்கள் உட்பட மற்றவர்களிலேயே பிரச்சினை இருப்பதாக மரிக்கார் கூறியுள்ளார்.

சர்வஜன பலய உறுப்பினர்கள் சிலர் சில உள்ளூராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க ஒருதலைப்பட்சமாக முடிவு செய்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாளைய வாக்கெடுப்பின் முடிவுகளிலிருந்தே வெற்றி யாருக்கு என்பது தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...