child abuse f0ee99b2 ae46 11e7 b6fd 382ae8cf2ee4
செய்திகள்இலங்கை

ஆபாசப்படம் காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் – இளைஞனுக்கு மறியல் !

Share

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 வயதான சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தினை காட்டி 21 வயது இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார் .

குறித்த இளைஞன் நேற்று (29) வவுணதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்று அங்கு பணியாற்றிவரும் நிலையில் குறித்த சிறுமி தாயாருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்று சிறுமி தனிமையில் இருந்த வேளையில் அங்கு சென்ற இளைஞன் தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தினைக்காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தெரிவித்ததனைத்தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் இன்று (30) கைது செய்யப்பட்ட இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...