IMG 5278 1 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்தில் வயோதிபர் தலை சிதறிப் பலி! – வவுனியாவில் சோகம்

Share

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்டச் சந்திக்கு அண்மையிலுள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியில் இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுத்திட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை, புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த வயோதிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, விபத்துக்குள்ளான வயோதிபர் மீது வீதியால் வந்த பிறிதொரு வாகனம் அவரது தலைப் பகுதியில் மோதிச் சென்றமையால் அவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பலியானார்.

இந்த விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தடவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற வயோதிபரே மரணமடைந்தார்.

எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியான பெண் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து இடம்பெற்றபோது மரணித்த வயோதிபரின் பின்னால் இராணுவத்தினரது வாகனம் ஒன்று வந்தது எனவும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாரிய சத்தம் கேட்டது எனவும், இராணுவத்தினரது வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர், உடனடியாக அங்கிருந்து குறித்த வாகனம் சென்றுவிட்டது எனவும் விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்ற மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...