IMG 5278 1 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்தில் வயோதிபர் தலை சிதறிப் பலி! – வவுனியாவில் சோகம்

Share

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்டச் சந்திக்கு அண்மையிலுள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியில் இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுத்திட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை, புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த வயோதிபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, விபத்துக்குள்ளான வயோதிபர் மீது வீதியால் வந்த பிறிதொரு வாகனம் அவரது தலைப் பகுதியில் மோதிச் சென்றமையால் அவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பலியானார்.

இந்த விபத்துடன் சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தடவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற வயோதிபரே மரணமடைந்தார்.

எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியான பெண் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து இடம்பெற்றபோது மரணித்த வயோதிபரின் பின்னால் இராணுவத்தினரது வாகனம் ஒன்று வந்தது எனவும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாரிய சத்தம் கேட்டது எனவும், இராணுவத்தினரது வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர், உடனடியாக அங்கிருந்து குறித்த வாகனம் சென்றுவிட்டது எனவும் விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்ற மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...