kar
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்! – சர்வதேசத்தை நாடுகிறார் பேராயர்

Share

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடுவதைப் போன்று தோன்றுவதாக கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சூம் தொழில்நுட்பம் மூலமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில்  அவர் கருத்து தெரிவிக்கையில்,

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பில்
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முனி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகின்றோம். இதுதொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை மட்டுமன்றி தனக்கு தொடர்புள்ள சக்தி வாய்ந்த நாடுகளிடமும் உதவியை நாடவுள்ளதாக கொழும்பு பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய குண்டுவெடிப்பில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடிவருவது தெளிவாகத் தெரிகிறது.இச் சம்பவத்தை பொலிஸார் கைகழுவி விட முயற்சித்தனர். அப்படி நடக்க அனுமதிக்க முடியாது.

இதுதொடர்பான விசாரணை முடிவதற்குள் நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் அதே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக தனது கூட்டாளிகள் மூவர் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவார்கள். இம்மாத இறுதியில் இருந்து அதனை நேரடியாக கையாள்வதற்கான வாய்ப்பு அந்த அமைப்புக்கு இருக்கும்.  இது நீதிக்கான தேடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...