kar
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்! – சர்வதேசத்தை நாடுகிறார் பேராயர்

Share

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடுவதைப் போன்று தோன்றுவதாக கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சூம் தொழில்நுட்பம் மூலமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில்  அவர் கருத்து தெரிவிக்கையில்,

பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பில்
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முனி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகின்றோம். இதுதொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை மட்டுமன்றி தனக்கு தொடர்புள்ள சக்தி வாய்ந்த நாடுகளிடமும் உதவியை நாடவுள்ளதாக கொழும்பு பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொரளை தேவாலய குண்டுவெடிப்பில் அரசாங்கமும் பொலிஸாரும் நாடகமாடிவருவது தெளிவாகத் தெரிகிறது.இச் சம்பவத்தை பொலிஸார் கைகழுவி விட முயற்சித்தனர். அப்படி நடக்க அனுமதிக்க முடியாது.

இதுதொடர்பான விசாரணை முடிவதற்குள் நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் அதே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயமாகும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக தனது கூட்டாளிகள் மூவர் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவார்கள். இம்மாத இறுதியில் இருந்து அதனை நேரடியாக கையாள்வதற்கான வாய்ப்பு அந்த அமைப்புக்கு இருக்கும்.  இது நீதிக்கான தேடலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...