மதுபானம் அருந்திய சாரதி: 100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் (படங்கள்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் காரொன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா – கொட்டகலைக்கு இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் பயணித்த காரே இவ்வாறு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த சாரதி நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

Thalavakkalai Accident 01

சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version