samayam tamil
செய்திகள்இந்தியாசினிமாபொழுதுபோக்கு

போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கானின் மகனுக்கு 14 நாட்கள் மறியல்!

Share

நடிகர் ஷாருக்கானின் மகன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றில், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் இருந்து, கோவா சென்ற சொகுசு கப்பலில் விருந்தொன்று நடைபெற்றிருந்தது.

குறித்த விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்துவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த கப்பலுக்குச் சாதாரண பயணிகளைப் போல சென்ற போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அங்கு கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியமை தெரியவந்தது.

இதனையடுத்து, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளடங்கலாக, எட்டுப் பேரைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், 3 நாட்களின் பின்னர் அவர்களை மும்பை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இந்நிலையில், குறித்த எட்டுப் பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68308d9c71c6a
இலங்கைசெய்திகள்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்...

25 68308f63a7a09
இலங்கைசெய்திகள்

ஏழு வயது சிறுமியை தவறான செயலுக்கு உட்படுத்திய முதியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...

25 683094aa5d831
உலகம்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி...

25 68309c4654a51
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா பேரின் மிகமுக்கிய ஒப்பந்தம் நடைமுறைக்கு

உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான...