bo
செய்திகள்உலகம்

காபூல் விமான நிலையம் அருகே இரட்டைக் குண்டுத் தாக்குதல்! – தொடரும் மீட்பு பணி

Share

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதி அருகே முதலாவது குண்டுத்தாக்குதலும், அதன் அருகே உள்ள பரோன் விடுதி அருகே இரண்டாவது குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இக் குண்டுத் தாக்குதலில், அமெரிக்க ராணுவ வீரர்கள், தலிபான்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புக்கள் உள்ளன என அமெரிக்க அதிபர் மற்றும் உளவு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து 24 மணி நேரத்துக்குள் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானியர்கள் உட்பட வெளிநாட்டினர் பலரும் நாட்டைவிட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையிலேயே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கான் முழுவதும் வந்துள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தின் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை உலக நாடுகளிடையே மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

bomb

bom

bombb

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...