china sl
செய்திகள்அரசியல்இலங்கை

நன்கொடையாக அரிசியா?? – இல்லவே இல்லை என்கிறது சீனா – ஆம் என்கிறது இலங்கை

Share

இலங்கைக்கு நன்கொடையாக ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசி சீனாவால் வழங்கப்படவுள்ளது எனும் தகவலை சீனா மறுத்துள்ளது.

ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு சீன இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசியை நன்கொடையாக வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டது உண்மையே. இருப்பினும் அந்த கோரிக்கையை சீனா மறுத்துள்ளது – என்றார்.

இதேவேளை, இது தொடர்பில்அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கையில்,

இலங்கை – சீனா இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசி நன்கொடையாக பெறப்படவுள்ளது – என்றார்.

இந்த நிலையில், குறித்த ஆங்கில பத்திரிக்கைக்கு, வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள சீன அரசு இதற்கு இணங்கியுள்ளது. இந்த விடயத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...