china sl
செய்திகள்அரசியல்இலங்கை

நன்கொடையாக அரிசியா?? – இல்லவே இல்லை என்கிறது சீனா – ஆம் என்கிறது இலங்கை

Share

இலங்கைக்கு நன்கொடையாக ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசி சீனாவால் வழங்கப்படவுள்ளது எனும் தகவலை சீனா மறுத்துள்ளது.

ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு சீன இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரிசியை நன்கொடையாக வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டது உண்மையே. இருப்பினும் அந்த கோரிக்கையை சீனா மறுத்துள்ளது – என்றார்.

இதேவேளை, இது தொடர்பில்அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவிக்கையில்,

இலங்கை – சீனா இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரிசி நன்கொடையாக பெறப்படவுள்ளது – என்றார்.

இந்த நிலையில், குறித்த ஆங்கில பத்திரிக்கைக்கு, வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள சீன அரசு இதற்கு இணங்கியுள்ளது. இந்த விடயத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...