நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டால் காகித இறக்குமதியும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் அச்சுத் தொழிலும் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் புத்தக அச்சிடும் பணியும் முடங்கியுள்ளது.
இதேவேளை, புத்தகங்களை அச்சிடுவதற்கான காகிதத்தின் விலை சுமார் 150 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சமந்தா இந்திவர தெரிவித்துள்ளார்.
#SriLankaNews