sarath
செய்திகள்அரசியல்இலங்கை

கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்! – பொன்சேகாவுக்கு வீரசேகர எச்சரிக்கை

Share

” கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய முற்பட வேண்டாம்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொன்சேகா எம்.பி. தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.

” பொன்சேகாவின் குணம் பற்றி அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நல்லாட்சியின்போது அவருக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை. ஆனால் இன்று பாதுகாப்பு அமைச்சு பதவி பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறார்.

யுத்தம் முடிவடைந்த பிறகு தேவையற்ற விதத்தில் ஆயுத கப்பலொன்றை கொண்டுவந்தார். அதனை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் திருப்பி அனுப்பியதாலேயே அவருடன் பொன்சேகா முரண்பட்டார். எனவே, கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...