wimal
செய்திகள்அரசியல்இலங்கை

தவறுகளை திருத்திக்கொள்ள வெட்கப்படக்கூடாது! – வீரவன்ஸ அரசுக்கு அறிவுரை

Share

” விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குகூட சட்டமூலங்களை மீள பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, எமது நாட்டிலும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக முடிவுகளை மீளப்பெறுவது தவறு கிடையாது.” – என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, விவசாயிகளையும், விவசாயத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளை , விவசாயத்திலிருந்து விரட்டியடிக்காத வகையிலேயே உரப்பிரச்சினை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். இது விடயத்தில் நாம் விட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக விவசாயிகளின் எதிர்ப்பினால் இந்திய பிரதமர் இரண்டு சட்டங்களை மீள பெற்றுக்கொண்டார். அது அவரின் நற்பெயருக்கு பாதிப்பாக அமையவில்லை. எனவே, இலங்கையிலும் வர்த்தக ரீதியான விவசாயத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் காரணிகளை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.

இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வெட்கப்படக்கூடாது. பிழையான விடயத்தை சரியானது என தொடர்ந்தும் விளையாடிக் கொண்டிருப்பதே வெட்கப்பட வேண்டியதாகும். ” – என்றார் அமைச்சர் விமல்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...