download 4 4
செய்திகள்இலங்கை

திலீபனின் நினைவு கூறல் தடை – எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார் சிவஞானம்!

Share

தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் உட்பட மூவரினை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதாக வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (23) கைதாகிய செல்வராஜா கஜேந்திரன் , நேற்றையதினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பார்.

இந்நிலையில் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது எமது அடிப்படை உரிமை, அதிலும் அகிம்சை வழியில் எமது இனத்தின் விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த தியாகி திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...