imf
செய்திகள்அரசியல்இலங்கை

கடன் நெருக்கடி! – நாணய நிதியத்தை நாடுகிறது இலங்கை?

Share

நாடு எதிர்நோக்கும் கடன் பிரச்சினையால் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லண்டன் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தடுப்பதற்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள பரிசீலித்து வருகின்றோம்.

கடனைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கும் இலங்கை அனைத்து வழிகளையும் பரிசீலித்து வருகின்றோம்.

“சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஐஎம்எஃப் உடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருப்பதால், இது மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும். கூடுதலாக, மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான பணத்தை நாங்கள் கண்டறிய வேண்டும்.

அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாமையால் மின்சாரத் தடைகள் மற்றும் எரிபொருள் மற்றும் பால் மா உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம். ஜூலையில் இன்னும் 1 பில்லியன் டொலர் வரவுள்ளன. ஆனால் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு ஏற்கனவே தீர்ந்துவிட்டது.

கடந்த மாதம், சீனா 1.5 பில்லியன் டொலர் ரென்மின்பி பரிமாற்றத்தை வெளியிட்டது, ஆனால் இது டொலர் மதிப்பிலான கடனை திருப்பிச் செலுத்த பயன்படுத்த முடியாது என அவர் பைனான்சியல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...