highway
செய்திகள்இலங்கை

நெடுஞ்சாலைகளால் உயிர் பல்வகைமை பாதிப்பு!

Share

நெடுஞ்சாலைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் சூழல் மாசடைதல் காரணமாக  உயிர்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பறவைகள் உட்பட 500,000 ற்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் சமீபத்திய ஆண்டுகளில் இறந்துள்ளதாக  சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

நெடுஞ்சாலைகளில் வாகனங்கள்  மோதுவதனாலும்  வாகனங்களிலிருந்து வெளியேறும்  மாசுகளாலும் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிடம்  வினவியபோது, ​​

அதிவேக நெடுஞ்சாலைகளில்  சில  வனவிலங்குகளால் பிரச்சினைகள் ஏற்படுவதை ஒப்புக்கொள்கின்றேன்.

இந்நிலையைக் கருத்திற் கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளின்  இருபுறங்களிலும் பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பயன்படுத்தும் மரங்களை வளர்க்க வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சாலையின் இருபுறமும் விலங்குகளை ஈர்க்கும் மரங்கள் வளர்வதைத் தடுக்க அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக மயில்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மக்களை எச்சரிக்கும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில வனவிலங்குகள் நெடுஞ்சாலைகளுக்கு வெளியே இறந்து பல்வேறு இடங்களில் கிடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...